வியாழன், 13 பிப்ரவரி, 2014

அன்பிலும் மேலானது அன்பே!

காதல் அல்லது திருமணத்தை இரு உள்ளங்கள் இணையும் நிகழ்வாக நாம் கருதுகிறோம். ஒரு பெண்ணை/ஆணை காதலிக்க வைப்பதிலோ வெற்றிகரமாக திருமணம் செய்து கொள்வதிலோ சாதனை ஒன்றும் இல்லை. அந்த காதலை, உறவை எக்காலத்திற்குமானதாக நிலைக்கச் செய்வதில்தான் பெரும் சவால் இருக்கிறது.
கடந்த 15-20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை. அதாவது அன்று வீடு தாண்டி, தெரு தாண்டி, நாடு தாண்டி ஒருவரை காதலிப்பதென்பது முடியாத அல்லது கடினமான செயலாக இருந்தது. அதனால் உறவுகளுக்குள்ளும் சாதிகளுக்குள்ளும் மதத்திற்குள்ளும்மே பெரும்பாலனவர்களுக்கு வாழ்க்கை அமைந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை....
குடும்பமாக வாழ்வதும் ஒருவருக்கு ஒருவராக வாழ்வதும் அடிமை கருத்தியலோ பழமைவாதமோ அல்ல. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசிப்பவராக, நம்பிக்கைக்கு பாத்திரமானவராக மரியாதை கொண்டவராக சம உரிமை கொண்டாடுபவராக இருக்க வேண்டியது மனிதப் பண்புகளின் தலைசிறந்த அடையாளம். ஆகா, ஆண- பெண் உறவுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கிறது.
இன்றைய காதலர்கள் நாளைய தம்பதியராகவும், தம்பதியர் என்றேன்ரைக்கும் காதலர்களாகவும் இருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு, உங்களின் அன்பு நிறைந்த நல்வாழ்க்கைக்கு என் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...!!
Courtesy:புதிய வாழ்வியல்

கருத்துகள் இல்லை: