செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!!
சமீப காலமாக ஒரு சில நபரால் நட்பின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது இல்லை. அதனால் நெருங்கிய நட்புகளும் இல்லை சிலரை தவிர... எல்லாரிடமும் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டி ஒட்டாமல் தான்.. ஆனால் வாழ்வில் இடையில் ஏற்பட்ட ஒரு மன உளைச்சல் பகிர நம்பிக்கையான நட்பை தேடியது.. அதுவும் உண்மையாக முழுதும் புரிந்துகொள்ள முடிகிற நேர்மையான நட்புக்காக மனதில் தேடல் இருந்துகொண்டே இருந்தது. மனதுக்கு நெருக்கமான நட்பாக வினோமுதலில் அறிமுகம் (முகநூலில் அல்ல), அட அழகாக இருக்கிறர்களே என்று தான் முதலில் பார்த்த போது தோன்றியது, ஆனால் சில நாட்களிலேயே என்னை அறியாமல் ஈர்த்தார் அழகை தாண்டி அன்பால்..தாழ்வு மனப்பான்மையும், குற்ற உணர்வும் என்னை குத்தி கிழித்து என் சுயத்தை அழிக்க முனைந்த நாட்கள் உண்டு. அதனாலேயே ஆரம்பத்தில் நட்பாக சிறிது தயக்கம் காட்டினேன்.. ஆனால் எல்லாவற்றையும் புறம்தள்ளி நட்பாக ஏற்று கொண்டாள். வினோவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடும் சண்டையும் அதிகம் வரும். என்னைவிட வயதில் சிறியவள். ஆனாலும் அதை எல்லாம் தாண்டி அன்பால் அந்த வயது வித்தியாசத்தை மறக்க செய்தாள். வினோவுக்கான "சுய மரியாதையை" (SELF RESPECT) நிலை நாட்டுவதில் ஒவ்வொரு முறையும் போராடி இறுதியில் நான் தோற்றே விடுகிறேன்...ஒரு நாளாவது வெற்றி பெறுவேன் என்ற மனிதத்தின் மீதான ஒட்டு மொத்த நம்பிக்கையோடு தொடர்கிறேன்... மனக்குழப்பம் , சோர்வு என மனதளவில் நொறுங்கி இருக்கும் போது வினோவின் குரலும் பேச்சும் என்னை வெகு எளிதாக சகஜ நிலைக்கு கொண்டு வரும். என்ன செய்து இவள் அன்புக்கு நன்றி தெரிவிப்பது அன்பாகவே மாறி அவளுடன் கரைந்துவிடுவதை தவிர... எனக்கு possessiveness எல்லாம் கொஞ்சம் உண்டு எல்லாரிடமும் அல்ல மனதுக்கு நெருக்கமானவர்களிடம் அது வினோவிடம் நிறைய உண்டு...அதை வினோவிடம் வெளிபடுத்துவதும் இல்லை. சிலரின் நட்பு நாம் சாகும் வரை வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைக்கும் ஒரு நட்பு இவளுடையது... தோழமையில் என் இறுதி வரை துணையாக நானே என்னுடயை கோவத்தால், ஈகோவால், கிறுக்குத்தனமான செயலால் சற்று தள்ளி நின்றாலும் மண்டையில் இரண்டு தட்டு தட்டி என்னை ஏற்று கொள்ள வேண்டும்...
அநேகமாக எல்லாரும் வாழ்விலும் சில துயரங்களை, ஏமாற்றங்களை, அதிர்ச்சிகளை தாண்டி தான் வந்திருப்பார்கள்.இந்த துயரம், ஏமாற்றம், அதிர்ச்சி எல்லாம் கடக்க நல்ல நட்பும் ஆறுதலான தோளும் அன்பான மனமும் நட்பாக அமைய வேண்டும்...அப்படி அமைந்த நான் ஒரு விதத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவன்...
அதனால் நான் தான் முதல் வாழ்த்து சொல்வேன்...எல்லா வளமும் பெற்று மன நிறைவாக, சந்தோசமாக, ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்...

கருத்துகள் இல்லை: